<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மையநீரோட்டம்</title>
	<atom:link href="http://maiya.neerottam.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://maiya.neerottam.com</link>
	<description>இங்கே எதுவும் இல்லை</description>
	<lastBuildDate>Thu, 08 Dec 2011 06:57:47 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>திடீர் நினைவுகள்</title>
		<link>http://maiya.neerottam.com/2011/09/05/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://maiya.neerottam.com/2011/09/05/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 05 Sep 2011 07:02:37 +0000</pubDate>
		<dc:creator>சாத்தான்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[ஊடகம்]]></category>
		<category><![CDATA[புலம்பல்]]></category>
		<category><![CDATA[பொட்டி]]></category>
		<category><![CDATA[ரோசனை]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://maiya.neerottam.com/?p=1484</guid>
		<description><![CDATA[(எச்சரிக்கை: இது பியூர்லி பர்சனல் இடுகை. எழுதியே ஆக வேண்டியிருந்தது.) திடீரென்று தொடர்பே இல்லாமல் இளையராஜாவின் &#8216;இதயம் போகுதே&#8217; பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டபோது பயங்கர சோகமானேன். அப்போது எனக்கு எட்டு வயதுகூட நிரம்பவில்லை. அருமையான, ஆனால் ரொம்ப சோகமான பாட்டு அது. &#8216;புதிய வார்ப்புக&#8217;ளில் கதாநாயகர் பாக்யராஜ் காதலி ரதி அக்னிஹோத்ரியை விட்டுப் பேருந்தில் போகும்போது அசரீரியாக வரும் அந்தப் பாடல். பேருந்து புழுதியைக் கிளப்பிக்கொண்டு போகும், ரதி பொட்டலில், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>(எச்சரிக்கை: இது பியூர்லி பர்சனல் இடுகை. எழுதியே ஆக வேண்டியிருந்தது.)</p>
<p>திடீரென்று தொடர்பே இல்லாமல் இளையராஜாவின் &#8216;இதயம் போகுதே&#8217; பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டபோது பயங்கர சோகமானேன். அப்போது எனக்கு எட்டு வயதுகூட நிரம்பவில்லை. அருமையான, ஆனால் ரொம்ப சோகமான பாட்டு அது. &#8216;புதிய வார்ப்புக&#8217;ளில் கதாநாயகர் பாக்யராஜ் காதலி ரதி அக்னிஹோத்ரியை விட்டுப் பேருந்தில் போகும்போது அசரீரியாக வரும் அந்தப் பாடல். பேருந்து புழுதியைக் கிளப்பிக்கொண்டு போகும், ரதி பொட்டலில், வெயிலில் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்க பாடல் தொடங்குவது போல் ஒரு காட்சி மனதில் இருக்கிறது.  உடனே தொடங்கியது நோஸ்டால்ஜிய இணையத் தேடல். அந்தப் படம் வந்த ஆண்டு 1979 என்று தெரிந்தது. சரியாக இன்ன வயதில் இன்ன அனுபவம் எனக்குக் கிடைத்தது என்று &#8216;தேதிப்படுத்த&#8217; முடிவது புல்லரிப்பாக இருந்தது. <a href="http://www.youtube.com/watch?v=czObr0hX5SY">பாட்டின் வீடியோ</a> (பொட்டல் நிலம் இல்லை). இளவயது காதல் பிரிவு/முறிவுகளின்போதெல்லாம் இந்தப் பாட்டுதான் மனதில் எழும்.</p>
<p>உடனே பின்விளைவாக வேறு சில நினைவுகள் கிளம்பின. குடும்பப் பிரச்சினை காரணமாக பேச்சுவார்த்தை இல்லாதிருந்த ஒரு உறவினரைத் தற்செயலாக திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் &#8216;கழுகு&#8217; (1981) படம் பார்க்கப் போயிருந்தபோது எதிர்கொண்டு ஓரிரு வார்த்தை பேசியது ஒரு நினைவு. &#8216;கழுகுவில்&#8217; நன்றாக நினைவிருப்பது அதில் வரும் பேருந்தும் ரஜினிகாந்தின் நண்பர் கொலையாவதும். பிறகு எதற்கோ ஒரு எலுமிச்சம்பழமும் நினைவில் நின்றிருக்கிறது. <a href="http://en.wikipedia.org/wiki/Kazhugu_%281981_film%29">விக்கிபீடியா</a>வில் கதையைப் படித்தபோதுதான் அது துர்சடங்குகள் நிறைந்த கிரிமினல் சாமியார் கொலைப் படம் என்று தெரிந்தது. எலுமிச்சம்பழத்திற்கு இப்போது நியாயங்கற்பிக்க முடிகிறது. (&#8216;மெட்ராஸ் டு பாண்டிச்சேரி&#8217;க்குப் பிறகு தமிழில் வந்த ரோட் மூவி இதுதானோ?) <a href="http://www.imdb.com/title/tt0073600/">ஒரிஜினலில்</a> கூட பஸ் ஓடியிருக்கிறது.</p>
<p>அதே காலகட்டத்தில் காரணமே இல்லாமல் பீதியைக் கிளப்பிய ஒரு படம் &#8216;தூரத்து இடி முழக்கம்&#8217;. 1981இல் வந்த விஜயகாந்த் படம். இணையத்தில் தகவல்கள் போதாது. அந்த வயதில் எதனாலோ சில காட்சிகள் அமானுஷ்யமானவையாகத் தோன்றி பயந்திருக்கிறேன். நான் பார்த்தது தொலைக்காட்சியில். எனவே 1982 வாக்கில் பார்த்திருக்கக்கூடும். இசை <a href="http://salilda.com/filmsongs/other/tamil/thooratthu.asp">சலீல் சௌதுரி</a>. &#8216;<a href="http://www.youtube.com/watch?v=_HDjIJ6HD2s">உள்ளமெல்லாம் தள்ளாடுதே</a>&#8216; பாட்டை இப்போது கேட்டால் ஒரு லாங்ஷாட் காட்சி திகிலூட்டியதும் படம் முடிந்து மாலை இருளில் பாட்டி வீட்டு வாசல் படிக்கட்டில் வந்து உட்கார்ந்ததும் நினைவில் வந்து முட்டுகின்றன.</p>
<p>குழந்தைப் பருவத்திலிருந்து எனக்கு முதல் வேலை கிடைத்த சமயம் வரை நினைவில் தங்கிய திரைப்படப் பாடல்கள், படங்கள், தொடர்பான நினைவுகள் என்று எழுதிக்கொண்டே போகலாம். புகைப்படம் எடுத்துக்கொள்ளும் கலாச்சாரம் எங்கள் குடும்ப மரத்திலேயே இல்லை. எனவே எனக்கும் சிறுவயது என ஒன்று இருந்தது என்பதற்கு ஆதாரமாக மிகச் சில புகைப்படங்களும் நிறைய இளையராஜா பாட்டுக்களும்தான் இருக்கின்றன.</p>
<p>முப்பதாண்டுக் காலத்தில் இளையராஜா பாடல்களை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பல நூறு முறை கேட்டுவிட்டதாலோ என்னவோ தற்போது இளையராஜா இசையில் சுத்தமாக ஆர்வம் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு சம்பவத்தை, இடத்தை, முகத்தை, குரலை, எண்ணவோட்டத்தை நினைவிற்குக் கொண்டுவந்துவிடும் பாடல்கள் ஏராளம்.</p>
<p>கூகுளில் ஒரு ரவுண்டு காலப் பயணம் போய்விட்டு வந்தால் என் இயல்பிற்குத் தொடர்பே இல்லாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்படுவதுதான் இந்த வெட்டி ஆராய்ச்சியின் மிச்சம்.</p>
<img src="http://maiya.neerottam.com/6130a9d6/266bb3df/CCBot/1.0 (+http://www.commoncrawl.org/bot.html).gif" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://maiya.neerottam.com/2011/09/05/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>அதென்னவோ&#8230;</title>
		<link>http://maiya.neerottam.com/2011/07/11/%e0%ae%85%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%af%8b/</link>
		<comments>http://maiya.neerottam.com/2011/07/11/%e0%ae%85%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%af%8b/#comments</comments>
		<pubDate>Mon, 11 Jul 2011 11:27:10 +0000</pubDate>
		<dc:creator>சாத்தான்</dc:creator>
				<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<category><![CDATA[புலம்பல்]]></category>
		<category><![CDATA[ரோசனை]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://maiya.neerottam.com/2011/07/11/%e0%ae%85%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%af%8b/</guid>
		<description><![CDATA[நேற்று ர.சு. நல்லபெருமாளின் &#8216;கல்லுக்குள் ஈரம்&#8217; வாங்கினேன். கவிதா வானதி பதிப்பக வெளியீடு. கெட்டி அட்டை போட்ட குண்டுப் புத்தகம். மிக நேர்த்தியான பைண்டிங். அடக்கமான சைஸ். கையில் வைத்துப் படிக்க சுகமான வடிவம். அட்டை ஓவியமும் அந்த காலத்து ஓவியரான வினு வரைந்தது. எல்லாமுமாய்ச் சேர்ந்து அந்தப் புத்தகத்தை நான் படித்தபோது ஏற்படுத்திய அதே &#8220;நாஸ்டால்ஜிய&#8221; உணர்வை ஏற்படுத்தின. அதே சமயத்தில் அகிலனின் &#8216;புது வெள்ளம்&#8217; நாவலும் வாங்கினேன். இதுவும் சிறுவயதில் என்னைப் பரவசப்படுத்திய நாவல். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நேற்று ர.சு. நல்லபெருமாளின் &#8216;கல்லுக்குள் ஈரம்&#8217; வாங்கினேன். <del>கவிதா</del> வானதி பதிப்பக வெளியீடு. கெட்டி அட்டை போட்ட குண்டுப் புத்தகம். மிக நேர்த்தியான பைண்டிங். அடக்கமான சைஸ். கையில் வைத்துப் படிக்க சுகமான வடிவம். அட்டை ஓவியமும் அந்த காலத்து ஓவியரான வினு வரைந்தது. எல்லாமுமாய்ச் சேர்ந்து அந்தப் புத்தகத்தை நான் படித்தபோது ஏற்படுத்திய அதே &#8220;நாஸ்டால்ஜிய&#8221; உணர்வை ஏற்படுத்தின.</p>
<p>அதே சமயத்தில் அகிலனின் &#8216;புது வெள்ளம்&#8217; நாவலும் வாங்கினேன். இதுவும் சிறுவயதில் என்னைப் பரவசப்படுத்திய நாவல். இப்போது வாங்கியது தாகம் வெளியீடு. அட்டையில் ஃபோட்டோஷாப்பிற்கு உட்படுத்தப்பட்ட அபிஷேக் பச்சன், நந்திதா தாஸ், தபு, பாபி தியோல் படங்கள். கொடுமை, ஆனால் கிட்டத்தட்ட ர.சு.ந. அளவுக்கு நல்ல பைண்டிங். பழக்கமான, சிநேகமான எழுத்துரு. அட்டைதான் பிரச்சினை. புத்தகத்தைத் திறந்துவிட்டால் படிப்பதில் சிக்கல் இருக்காது.</p>
<p>அதென்னவோ இன்றைய பதிப்பாளர்கள் வழவழ என்ற மஞ்ச கலர் மேப்லித்தோ தாளில் ஒரே சைஸில் போடும் புத்தகங்களைப் பார்த்தால் எனக்குப் படிக்க ஆர்வம் ஏற்படுவதில்லை. புதுவெள்ளத்தைப் படிக்கத் தொடங்கினால் 1945ஆம் ஆண்டு நம் கண் முன் விரியத் தாளின் நிறமும் புத்தகத்தின் சைஸும் பைண்டிங்கும் கூட உதவுகின்றன. பதிப்புத் தொழில்நுட்பம் முன்னேறிவிட்டாலும் புத்தகங்களுக்குரிய இந்தக் கவர்ச்சியைத்தான் இன்று வெளிவரும் புத்தகங்களில் பார்க்க முடியவில்லை. சுஜாதாவையும் சுந்தர ராமசாமியையும் எஸ். ராமகிருஷ்ணனையும் டீலக்ஸாகப் படிக்கும்போது உறுத்தவில்லை. ஆனால் அகிலன், கல்கி எல்லாம் மஞ்சள் பேப்பரில் வந்தால் வாசிப்பனுபவம் பாதிக்காது?</p>
<img src="http://maiya.neerottam.com/6130a9d6/266bb3df/CCBot/1.0 (+http://www.commoncrawl.org/bot.html).gif" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://maiya.neerottam.com/2011/07/11/%e0%ae%85%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%af%8b/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈவினிங் நேரத்திலே!</title>
		<link>http://maiya.neerottam.com/2011/06/02/%e0%ae%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/</link>
		<comments>http://maiya.neerottam.com/2011/06/02/%e0%ae%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/#comments</comments>
		<pubDate>Wed, 01 Jun 2011 18:31:21 +0000</pubDate>
		<dc:creator>சாத்தான்</dc:creator>
				<category><![CDATA[ஆங்கிலம்]]></category>
		<category><![CDATA[ஊடகம்]]></category>
		<category><![CDATA[கவிதை :-(]]></category>
		<category><![CDATA[கொஞ்சம் பெரிய பதிவு]]></category>
		<category><![CDATA[மொழி]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>

		<guid isPermaLink="false">http://maiya.neerottam.com/?p=1458</guid>
		<description><![CDATA[அக்டோபர் 1, 1950 குமுதம் இதழில் &#8216;காங்கேயன்&#8217; எழுதிய &#8216;ஈவினிங் நேரத்திலே!&#8217; என்ற பாடல் டவுன் பிலோ. மொபைற்காமிராவில் படம் பிடித்துப் போட்டதால் சுமாராகத்தான் இருக்கும். அந்தக் காலத்திலேயே ஆங்கிலம் கலந்து எழுத என்ன தைரியம்!]]></description>
			<content:encoded><![CDATA[<p>அக்டோபர் 1, 1950 குமுதம் இதழில் &#8216;காங்கேயன்&#8217; எழுதிய &#8216;ஈவினிங் நேரத்திலே!&#8217; என்ற பாடல் டவுன் பிலோ. மொபைற்காமிராவில் படம் பிடித்துப் போட்டதால் சுமாராகத்தான் இருக்கும். அந்தக் காலத்திலேயே ஆங்கிலம் கலந்து எழுத என்ன தைரியம்!</p>
<p style="text-align: center;"><img class="aligncenter size-full wp-image-1459" src="http://maiya.neerottam.com/wp-content/uploads/2011/06/venpa1c.jpg" alt="" width="300" height="551" /></p>
<p style="text-align: center;"><img class="aligncenter size-full wp-image-1460" src="http://maiya.neerottam.com/wp-content/uploads/2011/06/venpa2c.jpg" alt="" width="300" height="672" /></p>
<p style="text-align: center;"><img class="aligncenter size-full wp-image-1461" src="http://maiya.neerottam.com/wp-content/uploads/2011/06/venpa3c.jpg" alt="" width="300" height="633" /></p>
<img src="http://maiya.neerottam.com/6130a9d6/266bb3df/CCBot/1.0 (+http://www.commoncrawl.org/bot.html).gif" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://maiya.neerottam.com/2011/06/02/%e0%ae%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கொரட்டூர் கொலை வழக்கு</title>
		<link>http://maiya.neerottam.com/2010/06/25/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/</link>
		<comments>http://maiya.neerottam.com/2010/06/25/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jun 2010 11:05:29 +0000</pubDate>
		<dc:creator>சாத்தான்</dc:creator>
				<category><![CDATA[ஆங்கிலம்]]></category>
		<category><![CDATA[நாவல்]]></category>
		<category><![CDATA[புலம்பல்]]></category>
		<category><![CDATA[மேட்டர்]]></category>
		<category><![CDATA[மொழி]]></category>
		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://maiya.neerottam.com/?p=1390</guid>
		<description><![CDATA[அகதா க்றிஸ்டி என்ற மகத்தான மர்மக் கதாசிரியர் இவ்வளவு காலமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படாதிருந்த காரணத்தை சமீபத்தில் ஊகித்தேன். காப்பிரைட் போக, நமது மொழிபெயர்ப்பாளர்கள் கைவைத்து சுட்டுக்கொண்டதுதான் காரணமாக இருக்கும். சிட்னி ஷெல்டனைவிட அகதா க்றிஸ்டியை மொழிபெயர்ப்பது கடினம். முயன்ற பலர் அவருடைய மொழிநடை, நகைச்சுவை, பொதுவாகத் தூக்கலாகத் தெரியும் பிரிட்டிஷ் தன்மை, மற்றும் இன்ன பிற மொழிபெயர்க்கவியலாத்தன்மைகள், எல்லாவற்றையும் உணர்ந்து கைவிட்டிருப்பார்கள். ஆனால் இதெல்லாம் மொழிபெயர்ப்பாளர்கள் கவலை. குத்துமதிப்பாளர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் எதுவும் காணப்படாது. இப்போது எழுத்துக்களில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="word-spacing: normal;">அகதா க்றிஸ்டி என்ற மகத்தான மர்மக் கதாசிரியர் இவ்வளவு காலமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படாதிருந்த காரணத்தை சமீபத்தில் ஊகித்தேன். காப்பிரைட் போக, நமது மொழிபெயர்ப்பாளர்கள் கைவைத்து சுட்டுக்கொண்டதுதான் காரணமாக இருக்கும். சிட்னி ஷெல்டனைவிட அகதா க்றிஸ்டியை மொழிபெயர்ப்பது கடினம். முயன்ற பலர் அவருடைய மொழிநடை, நகைச்சுவை, பொதுவாகத் தூக்கலாகத் தெரியும் பிரிட்டிஷ் தன்மை, மற்றும் இன்ன பிற மொழிபெயர்க்கவியலாத்தன்மைகள், எல்லாவற்றையும் உணர்ந்து கைவிட்டிருப்பார்கள்.</p>
<p style="word-spacing: normal;">ஆனால் இதெல்லாம் மொழிபெயர்ப்பாளர்கள் கவலை. குத்துமதிப்பாளர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் எதுவும் காணப்படாது. இப்போது எழுத்துக்களில் எது இருந்தாலும் அச்சிட்டுப் பின்பக்கம் ஒரு விலையைப் போட்டுவிடலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது போல. உதாரணமாக, கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் என்பவரின் மொழிபெயர்ப்பில் கண்ணதாசன் வெளியீட்டில் அகதா க்றிஸ்டியின் The Hollow என்ற நாவல். முதல் பத்தியைப் படித்தின்புறுக -</p>
<p style="word-spacing: normal; padding-left: 30px;">வார இறுதியின் ஓய்வினையும் பொழுதுபோக்கினையும் நெருங்கிப் புலர்ந்துக் கொண்டிருந்த அந்த வெள்ளிக் கிழமைக் காலையில், கமிஷனர் ஹென்றியின் பரந்து விரிந்த பங்களாவான &#8216;ஹாலோ&#8217;வில் அனைவரும் இன்னும் கொட்டும் பனியின் குளிர் தாக்கத்தால் படுக்கையில் சுருண்டே கிடக்க, தன் நீல விழிகளைப் பட்டென திறந்து, தனக்கே உரிய உடனடி சுறுசுறுப்புடன் மெத்தையிலிருந்துத் துள்ளி எழுந்தார், லூசி ஆங்கட்டேல். நெளிந்து, சோம்பி, குளிரால் வெடவெடத்து, இன்னும் கொஞ்சம் படுத்திருப்போமா என்று படுக்கையைத் திரும்பித் திரும்பிப் பார்த்து &#8211; என, எந்த மந்த நடவடிக்கையும் இல்லாமல், தன் பிரத்யேக முத்திரைச் சக்தியோடு கிளம்பினார் லூசி. முக்கியமான ஒரு விஷயம் குறித்து உடனடியாக ஆலோசனை செய்து உரையாட, எழுந்த குழந்தையின் துள்ளல் போன்ற யாராலும் ஈடுகொடுக்க முடியாத ஒரு வேகம் லூசிக்குள் புரண்டது. ஆலோசனைக்கு, நேற்று இரவு ஹாலோ வந்திறங்கியிருந்த இவரின் ஒன்று விட்டு சகோதரி மிக்டே-வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். படுக்கையிலிருந்து இறங்கிய லூசி, இந்த வயதிலும் இன்னும் பளபளப்புடன் மிளிரும் தன் இருதோள்களையும் அசட்டை கலந்து பெருமிதமாய்ப் பார்த்துக் கொண்டு, மிக்டே அறை நோக்கிப் பாய்ந்தார். தன்னுடைய இயல்பான வழக்கப்படி, மிக்டேவுக்கும் தனக்குமான சம்பாஷணையைத் தனது வளமிக்கக் கற்பனைத் திறனால் தன்னுள்ளேயே நிகழ்த்தி, அதற்கு மிக்டே தரும் பதில்களையும் ஊகித்துக் கொண்டு, சம்பாஷணையின் போது எப்படியெல்லாம் கொடிகட்டித் திகழலாம் எனும் திட்டமிடலூடே, மிக்டே அறை வாயிலை அடைந்தார்.</p>
<p style="word-spacing: normal;">ஒரு பத்தியில் தனிநபராக ஒரு மொழிப் புரட்சியே நடத்தியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். தெளிவு, தர்க்க ரீதியாக வாக்கிய அமைப்பு, தகுந்த நிறுத்தக்குறிகள், சொலவடைகள் என்று எதையும் மிச்சம் வைக்காமல் கொந்தித் தள்ளியிருக்கிறார் இவர். மூல வடிவமோ எளிமையின் மறுவடிவம். மொழிபெயர்ப்பாளர்தான் வேண்டாத விஷயங்களைச் சேர்த்து செறிவூட்டியிருக்கிறார். Midge என்ற பெயர் மிக்டே என்றே புத்தகம் முழுவதும் வருகிறது. &#8220;&#8230;!&#8221; நிறைய உண்டு. அகதா க்றிஸ்டி ரசிகன் என்ற முறையில் பாதி நாள் கொலைவெறியில் அலைந்துகொண்டிருந்தேன்.</p>
<p style="word-spacing: normal; text-align: center;"><img class="size-full wp-image-1400  aligncenter" src="http://maiya.neerottam.com/wp-content/uploads/2010/06/thehollow1.jpg" alt="" width="450" height="288" /></p>
<p style="word-spacing: normal;">நாவலின் தலைப்பு &#8216;மன்மதக் கொலை&#8217;! கண்ணதாசன் பதிப்பகம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி நேரடியாக அச்சகத்திற்கு அனுப்பிவிடும் போலிருக்கிறது.</p>
<p style="word-spacing: normal;">அகதா க்றிஸ்டியை மொழிபெயர்ப்பது அசாத்திய காரியமல்ல. ஆனால் செய்பவருக்குத் தொழில் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? இந்த மாதிரி எழுதினால் எந்த மர்மமும் அவிழ வாய்ப்பில்லை.</p>
<p style="word-spacing: normal;">&#8220;தனது ஆழ்ந்த நிம்மதியான ஒரு மனோஹரக் காலைத் தூக்கத்திலிருந்து , அதிருப்தியாய் விழித்துக் கொண்டார் மிக்டே.&#8221;</p>
<p style="word-spacing: normal;">இப்படியே 424 பக்கம். விலை ரூ. 100. <strong>இ.ப.:</strong> <a href="http://poptamil.tumblr.com/post/6113970042/the-hollow">முன்னுரை</a></p>
<img src="http://maiya.neerottam.com/6130a9d6/266bb3df/CCBot/1.0 (+http://www.commoncrawl.org/bot.html).gif" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://maiya.neerottam.com/2010/06/25/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>அரைகுறைத் தமிழர்கள்</title>
		<link>http://maiya.neerottam.com/2009/10/21/%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/</link>
		<comments>http://maiya.neerottam.com/2009/10/21/%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/#comments</comments>
		<pubDate>Wed, 21 Oct 2009 07:16:32 +0000</pubDate>
		<dc:creator>சாத்தான்</dc:creator>
				<category><![CDATA[ஊடகம்]]></category>
		<category><![CDATA[புலம்பல்]]></category>
		<category><![CDATA[மொழி]]></category>

		<guid isPermaLink="false">http://maiya.neerottam.com/?p=854</guid>
		<description><![CDATA[கீழ்க்கண்டவை கடந்த சில நாட்களில் தட்ஸ்தமிழ்.காமில் வந்த தலைப்புச் செய்திகள். இவை அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை கண்ணில் படுகிறதா? வாசிம் அக்ரம் மனைவி திடீர் சுகவீனம் &#8211; சென்னையில் இறக்கப்பட்ட விமானம் போதையில் இருந்த ஏர் இந்தியா விமானி! நயன்-பிரபுதேவா.. இடையே புகுந்த ஆயிஷா! முக்காடு போட்டு வந்த புவனேஸ்வரி ஹிஸ்பானோவை வாங்கிய டாடா பெங்களூரில் கண் கலங்கிய வைகோ சரணாலய பகுதியில் ஆய்வை துவக்கிய கேரளா! உயிருடன் உள்ளவருக்கு அஞ்சலி செலுத்திய ப.சி! இல.கணேசனிடம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>கீழ்க்கண்டவை கடந்த சில நாட்களில் தட்ஸ்தமிழ்.காமில் வந்த தலைப்புச் செய்திகள். இவை அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை கண்ணில் படுகிறதா?</p>
<ul>
<li>வாசிம் அக்ரம் மனைவி திடீர் சுகவீனம் &#8211; சென்னையில் இறக்கப்பட்ட விமானம்</li>
<li>போதையில் இருந்த ஏர் இந்தியா விமானி!</li>
<li>நயன்-பிரபுதேவா.. இடையே புகுந்த ஆயிஷா!</li>
<li>முக்காடு போட்டு வந்த புவனேஸ்வரி</li>
<li>ஹிஸ்பானோவை வாங்கிய டாடா</li>
<li>பெங்களூரில் கண் கலங்கிய வைகோ</li>
<li>சரணாலய பகுதியில் ஆய்வை துவக்கிய கேரளா!</li>
<li>உயிருடன் உள்ளவருக்கு அஞ்சலி செலுத்திய ப.சி!</li>
<li>இல.கணேசனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்</li>
</ul>
<p>சில செய்திகள் வேறு காரணங்களுக்காகக் கடுப்பேற்றினாலும் நான் சொல்ல வருவது மொழி விஷயம். இது என்ன அபத்தமான நடை? இந்தத் தலைப்புச் செய்திகள் எல்லாம் முடிவடையாத வாக்கியங்கள். ஒன்றிரண்டு தடவை என்றால் வெரைட்டிக்காக விட்டுவிடலாம். ஆனால் இப்படி வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்துவது அச்சுப் பத்திரிகைகளில் கூட ஒரு புதிய பழக்கமாகியிருக்கிறது. படிக்கும்போது பயங்கர ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.</p>
<img src="http://maiya.neerottam.com/6130a9d6/266bb3df/CCBot/1.0 (+http://www.commoncrawl.org/bot.html).gif" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://maiya.neerottam.com/2009/10/21/%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
	</channel>
</rss>

