<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மையநீரோட்டம் &#187; வரலாறு</title>
	<atom:link href="http://maiya.neerottam.com/category/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://maiya.neerottam.com</link>
	<description>இங்கே எதுவும் இல்லை</description>
	<lastBuildDate>Thu, 08 Dec 2011 06:57:47 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>திடீர் நினைவுகள்</title>
		<link>http://maiya.neerottam.com/2011/09/05/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://maiya.neerottam.com/2011/09/05/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 05 Sep 2011 07:02:37 +0000</pubDate>
		<dc:creator>சாத்தான்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[ஊடகம்]]></category>
		<category><![CDATA[புலம்பல்]]></category>
		<category><![CDATA[பொட்டி]]></category>
		<category><![CDATA[ரோசனை]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://maiya.neerottam.com/?p=1484</guid>
		<description><![CDATA[(எச்சரிக்கை: இது பியூர்லி பர்சனல் இடுகை. எழுதியே ஆக வேண்டியிருந்தது.) திடீரென்று தொடர்பே இல்லாமல் இளையராஜாவின் &#8216;இதயம் போகுதே&#8217; பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டபோது பயங்கர சோகமானேன். அப்போது எனக்கு எட்டு வயதுகூட நிரம்பவில்லை. அருமையான, ஆனால் ரொம்ப சோகமான பாட்டு அது. &#8216;புதிய வார்ப்புக&#8217;ளில் கதாநாயகர் பாக்யராஜ் காதலி ரதி அக்னிஹோத்ரியை விட்டுப் பேருந்தில் போகும்போது அசரீரியாக வரும் அந்தப் பாடல். பேருந்து புழுதியைக் கிளப்பிக்கொண்டு போகும், ரதி பொட்டலில், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>(எச்சரிக்கை: இது பியூர்லி பர்சனல் இடுகை. எழுதியே ஆக வேண்டியிருந்தது.)</p>
<p>திடீரென்று தொடர்பே இல்லாமல் இளையராஜாவின் &#8216;இதயம் போகுதே&#8217; பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டபோது பயங்கர சோகமானேன். அப்போது எனக்கு எட்டு வயதுகூட நிரம்பவில்லை. அருமையான, ஆனால் ரொம்ப சோகமான பாட்டு அது. &#8216;புதிய வார்ப்புக&#8217;ளில் கதாநாயகர் பாக்யராஜ் காதலி ரதி அக்னிஹோத்ரியை விட்டுப் பேருந்தில் போகும்போது அசரீரியாக வரும் அந்தப் பாடல். பேருந்து புழுதியைக் கிளப்பிக்கொண்டு போகும், ரதி பொட்டலில், வெயிலில் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்க பாடல் தொடங்குவது போல் ஒரு காட்சி மனதில் இருக்கிறது.  உடனே தொடங்கியது நோஸ்டால்ஜிய இணையத் தேடல். அந்தப் படம் வந்த ஆண்டு 1979 என்று தெரிந்தது. சரியாக இன்ன வயதில் இன்ன அனுபவம் எனக்குக் கிடைத்தது என்று &#8216;தேதிப்படுத்த&#8217; முடிவது புல்லரிப்பாக இருந்தது. <a href="http://www.youtube.com/watch?v=czObr0hX5SY">பாட்டின் வீடியோ</a> (பொட்டல் நிலம் இல்லை). இளவயது காதல் பிரிவு/முறிவுகளின்போதெல்லாம் இந்தப் பாட்டுதான் மனதில் எழும்.</p>
<p>உடனே பின்விளைவாக வேறு சில நினைவுகள் கிளம்பின. குடும்பப் பிரச்சினை காரணமாக பேச்சுவார்த்தை இல்லாதிருந்த ஒரு உறவினரைத் தற்செயலாக திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் &#8216;கழுகு&#8217; (1981) படம் பார்க்கப் போயிருந்தபோது எதிர்கொண்டு ஓரிரு வார்த்தை பேசியது ஒரு நினைவு. &#8216;கழுகுவில்&#8217; நன்றாக நினைவிருப்பது அதில் வரும் பேருந்தும் ரஜினிகாந்தின் நண்பர் கொலையாவதும். பிறகு எதற்கோ ஒரு எலுமிச்சம்பழமும் நினைவில் நின்றிருக்கிறது. <a href="http://en.wikipedia.org/wiki/Kazhugu_%281981_film%29">விக்கிபீடியா</a>வில் கதையைப் படித்தபோதுதான் அது துர்சடங்குகள் நிறைந்த கிரிமினல் சாமியார் கொலைப் படம் என்று தெரிந்தது. எலுமிச்சம்பழத்திற்கு இப்போது நியாயங்கற்பிக்க முடிகிறது. (&#8216;மெட்ராஸ் டு பாண்டிச்சேரி&#8217;க்குப் பிறகு தமிழில் வந்த ரோட் மூவி இதுதானோ?) <a href="http://www.imdb.com/title/tt0073600/">ஒரிஜினலில்</a> கூட பஸ் ஓடியிருக்கிறது.</p>
<p>அதே காலகட்டத்தில் காரணமே இல்லாமல் பீதியைக் கிளப்பிய ஒரு படம் &#8216;தூரத்து இடி முழக்கம்&#8217;. 1981இல் வந்த விஜயகாந்த் படம். இணையத்தில் தகவல்கள் போதாது. அந்த வயதில் எதனாலோ சில காட்சிகள் அமானுஷ்யமானவையாகத் தோன்றி பயந்திருக்கிறேன். நான் பார்த்தது தொலைக்காட்சியில். எனவே 1982 வாக்கில் பார்த்திருக்கக்கூடும். இசை <a href="http://salilda.com/filmsongs/other/tamil/thooratthu.asp">சலீல் சௌதுரி</a>. &#8216;<a href="http://www.youtube.com/watch?v=_HDjIJ6HD2s">உள்ளமெல்லாம் தள்ளாடுதே</a>&#8216; பாட்டை இப்போது கேட்டால் ஒரு லாங்ஷாட் காட்சி திகிலூட்டியதும் படம் முடிந்து மாலை இருளில் பாட்டி வீட்டு வாசல் படிக்கட்டில் வந்து உட்கார்ந்ததும் நினைவில் வந்து முட்டுகின்றன.</p>
<p>குழந்தைப் பருவத்திலிருந்து எனக்கு முதல் வேலை கிடைத்த சமயம் வரை நினைவில் தங்கிய திரைப்படப் பாடல்கள், படங்கள், தொடர்பான நினைவுகள் என்று எழுதிக்கொண்டே போகலாம். புகைப்படம் எடுத்துக்கொள்ளும் கலாச்சாரம் எங்கள் குடும்ப மரத்திலேயே இல்லை. எனவே எனக்கும் சிறுவயது என ஒன்று இருந்தது என்பதற்கு ஆதாரமாக மிகச் சில புகைப்படங்களும் நிறைய இளையராஜா பாட்டுக்களும்தான் இருக்கின்றன.</p>
<p>முப்பதாண்டுக் காலத்தில் இளையராஜா பாடல்களை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பல நூறு முறை கேட்டுவிட்டதாலோ என்னவோ தற்போது இளையராஜா இசையில் சுத்தமாக ஆர்வம் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு சம்பவத்தை, இடத்தை, முகத்தை, குரலை, எண்ணவோட்டத்தை நினைவிற்குக் கொண்டுவந்துவிடும் பாடல்கள் ஏராளம்.</p>
<p>கூகுளில் ஒரு ரவுண்டு காலப் பயணம் போய்விட்டு வந்தால் என் இயல்பிற்குத் தொடர்பே இல்லாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்படுவதுதான் இந்த வெட்டி ஆராய்ச்சியின் மிச்சம்.</p>
<img src="http://maiya.neerottam.com/6130a9d6/266bb3df/CCBot/1.0 (+http://www.commoncrawl.org/bot.html).gif" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://maiya.neerottam.com/2011/09/05/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>அதென்னவோ&#8230;</title>
		<link>http://maiya.neerottam.com/2011/07/11/%e0%ae%85%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%af%8b/</link>
		<comments>http://maiya.neerottam.com/2011/07/11/%e0%ae%85%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%af%8b/#comments</comments>
		<pubDate>Mon, 11 Jul 2011 11:27:10 +0000</pubDate>
		<dc:creator>சாத்தான்</dc:creator>
				<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<category><![CDATA[புலம்பல்]]></category>
		<category><![CDATA[ரோசனை]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://maiya.neerottam.com/2011/07/11/%e0%ae%85%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%af%8b/</guid>
		<description><![CDATA[நேற்று ர.சு. நல்லபெருமாளின் &#8216;கல்லுக்குள் ஈரம்&#8217; வாங்கினேன். கவிதா வானதி பதிப்பக வெளியீடு. கெட்டி அட்டை போட்ட குண்டுப் புத்தகம். மிக நேர்த்தியான பைண்டிங். அடக்கமான சைஸ். கையில் வைத்துப் படிக்க சுகமான வடிவம். அட்டை ஓவியமும் அந்த காலத்து ஓவியரான வினு வரைந்தது. எல்லாமுமாய்ச் சேர்ந்து அந்தப் புத்தகத்தை நான் படித்தபோது ஏற்படுத்திய அதே &#8220;நாஸ்டால்ஜிய&#8221; உணர்வை ஏற்படுத்தின. அதே சமயத்தில் அகிலனின் &#8216;புது வெள்ளம்&#8217; நாவலும் வாங்கினேன். இதுவும் சிறுவயதில் என்னைப் பரவசப்படுத்திய நாவல். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நேற்று ர.சு. நல்லபெருமாளின் &#8216;கல்லுக்குள் ஈரம்&#8217; வாங்கினேன். <del>கவிதா</del> வானதி பதிப்பக வெளியீடு. கெட்டி அட்டை போட்ட குண்டுப் புத்தகம். மிக நேர்த்தியான பைண்டிங். அடக்கமான சைஸ். கையில் வைத்துப் படிக்க சுகமான வடிவம். அட்டை ஓவியமும் அந்த காலத்து ஓவியரான வினு வரைந்தது. எல்லாமுமாய்ச் சேர்ந்து அந்தப் புத்தகத்தை நான் படித்தபோது ஏற்படுத்திய அதே &#8220;நாஸ்டால்ஜிய&#8221; உணர்வை ஏற்படுத்தின.</p>
<p>அதே சமயத்தில் அகிலனின் &#8216;புது வெள்ளம்&#8217; நாவலும் வாங்கினேன். இதுவும் சிறுவயதில் என்னைப் பரவசப்படுத்திய நாவல். இப்போது வாங்கியது தாகம் வெளியீடு. அட்டையில் ஃபோட்டோஷாப்பிற்கு உட்படுத்தப்பட்ட அபிஷேக் பச்சன், நந்திதா தாஸ், தபு, பாபி தியோல் படங்கள். கொடுமை, ஆனால் கிட்டத்தட்ட ர.சு.ந. அளவுக்கு நல்ல பைண்டிங். பழக்கமான, சிநேகமான எழுத்துரு. அட்டைதான் பிரச்சினை. புத்தகத்தைத் திறந்துவிட்டால் படிப்பதில் சிக்கல் இருக்காது.</p>
<p>அதென்னவோ இன்றைய பதிப்பாளர்கள் வழவழ என்ற மஞ்ச கலர் மேப்லித்தோ தாளில் ஒரே சைஸில் போடும் புத்தகங்களைப் பார்த்தால் எனக்குப் படிக்க ஆர்வம் ஏற்படுவதில்லை. புதுவெள்ளத்தைப் படிக்கத் தொடங்கினால் 1945ஆம் ஆண்டு நம் கண் முன் விரியத் தாளின் நிறமும் புத்தகத்தின் சைஸும் பைண்டிங்கும் கூட உதவுகின்றன. பதிப்புத் தொழில்நுட்பம் முன்னேறிவிட்டாலும் புத்தகங்களுக்குரிய இந்தக் கவர்ச்சியைத்தான் இன்று வெளிவரும் புத்தகங்களில் பார்க்க முடியவில்லை. சுஜாதாவையும் சுந்தர ராமசாமியையும் எஸ். ராமகிருஷ்ணனையும் டீலக்ஸாகப் படிக்கும்போது உறுத்தவில்லை. ஆனால் அகிலன், கல்கி எல்லாம் மஞ்சள் பேப்பரில் வந்தால் வாசிப்பனுபவம் பாதிக்காது?</p>
<img src="http://maiya.neerottam.com/6130a9d6/266bb3df/CCBot/1.0 (+http://www.commoncrawl.org/bot.html).gif" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://maiya.neerottam.com/2011/07/11/%e0%ae%85%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%af%8b/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈவினிங் நேரத்திலே!</title>
		<link>http://maiya.neerottam.com/2011/06/02/%e0%ae%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/</link>
		<comments>http://maiya.neerottam.com/2011/06/02/%e0%ae%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/#comments</comments>
		<pubDate>Wed, 01 Jun 2011 18:31:21 +0000</pubDate>
		<dc:creator>சாத்தான்</dc:creator>
				<category><![CDATA[ஆங்கிலம்]]></category>
		<category><![CDATA[ஊடகம்]]></category>
		<category><![CDATA[கவிதை :-(]]></category>
		<category><![CDATA[கொஞ்சம் பெரிய பதிவு]]></category>
		<category><![CDATA[மொழி]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>

		<guid isPermaLink="false">http://maiya.neerottam.com/?p=1458</guid>
		<description><![CDATA[அக்டோபர் 1, 1950 குமுதம் இதழில் &#8216;காங்கேயன்&#8217; எழுதிய &#8216;ஈவினிங் நேரத்திலே!&#8217; என்ற பாடல் டவுன் பிலோ. மொபைற்காமிராவில் படம் பிடித்துப் போட்டதால் சுமாராகத்தான் இருக்கும். அந்தக் காலத்திலேயே ஆங்கிலம் கலந்து எழுத என்ன தைரியம்!]]></description>
			<content:encoded><![CDATA[<p>அக்டோபர் 1, 1950 குமுதம் இதழில் &#8216;காங்கேயன்&#8217; எழுதிய &#8216;ஈவினிங் நேரத்திலே!&#8217; என்ற பாடல் டவுன் பிலோ. மொபைற்காமிராவில் படம் பிடித்துப் போட்டதால் சுமாராகத்தான் இருக்கும். அந்தக் காலத்திலேயே ஆங்கிலம் கலந்து எழுத என்ன தைரியம்!</p>
<p style="text-align: center;"><img class="aligncenter size-full wp-image-1459" src="http://maiya.neerottam.com/wp-content/uploads/2011/06/venpa1c.jpg" alt="" width="300" height="551" /></p>
<p style="text-align: center;"><img class="aligncenter size-full wp-image-1460" src="http://maiya.neerottam.com/wp-content/uploads/2011/06/venpa2c.jpg" alt="" width="300" height="672" /></p>
<p style="text-align: center;"><img class="aligncenter size-full wp-image-1461" src="http://maiya.neerottam.com/wp-content/uploads/2011/06/venpa3c.jpg" alt="" width="300" height="633" /></p>
<img src="http://maiya.neerottam.com/6130a9d6/266bb3df/CCBot/1.0 (+http://www.commoncrawl.org/bot.html).gif" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://maiya.neerottam.com/2011/06/02/%e0%ae%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்தக இயந்திரம்!</title>
		<link>http://maiya.neerottam.com/2009/04/24/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/</link>
		<comments>http://maiya.neerottam.com/2009/04/24/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/#comments</comments>
		<pubDate>Fri, 24 Apr 2009 17:24:25 +0000</pubDate>
		<dc:creator>சாத்தான்</dc:creator>
				<category><![CDATA[ஊடகம்]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://maiya.neerottam.com/?p=732</guid>
		<description><![CDATA[நாம் கேட்கும் புத்தகத்தை ஐந்து நிமிடங்களில் அச்சடித்துத் தரும் புத்தக இயந்திரம் ஒன்று லண்டனில் வந்திருக்கிறது! புண்ணியம் கட்டிக்கொண்டிருப்பது புத்தகச் சேவை நிறுவனமான பிளாக்வெல் நிறுவனம். நிமிடத்துக்கு 100 பக்கங்கள் அச்சடிக்கிறது. பார்ப்பதற்கு ஜெராக்ஸ் இயந்திரம் போல் இருப்பதாக சொல்லப்படும் இந்த &#8216;எஸ்பிரசோ புத்தக இயந்திர&#8217;த்திற்கு உள்ளேயே அச்சிடுதல், பைண்டிங் எல்லாம் நடந்து முடிந்து புத்தகம் சூடாக வருகிறதாம். Hot off the (Es)press(0) என்று தமாசாக சொல்லிக்கொள்ளலாம். சுமார் 5 லட்சம் புத்தகங்கள் இப்படிக் கிடைக்கிறதாம். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாம் கேட்கும் புத்தகத்தை ஐந்து நிமிடங்களில் அச்சடித்துத் தரும் புத்தக இயந்திரம் ஒன்று லண்டனில் வந்திருக்கிறது! புண்ணியம் கட்டிக்கொண்டிருப்பது புத்தகச் சேவை நிறுவனமான பிளாக்வெல் நிறுவனம். நிமிடத்துக்கு 100 பக்கங்கள் அச்சடிக்கிறது.</p>
<p>பார்ப்பதற்கு ஜெராக்ஸ் இயந்திரம் போல் இருப்பதாக சொல்லப்படும் இந்த &#8216;எஸ்பிரசோ புத்தக இயந்திர&#8217;த்திற்கு உள்ளேயே அச்சிடுதல், பைண்டிங் எல்லாம் நடந்து முடிந்து புத்தகம் சூடாக வருகிறதாம். Hot off the (Es)press(0) என்று தமாசாக சொல்லிக்கொள்ளலாம்.</p>
<p>சுமார் 5 லட்சம் புத்தகங்கள் இப்படிக் கிடைக்கிறதாம். இன்னும் சில மாதங்களுக்குள் 10 லட்சம் புத்தகங்களைக் கிடைக்கச்செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் பதிப்புத் துறையில் அடுத்த பெரிய புரட்சி இதுதான் என்கிறார்கள். சிறு புத்தகக் கடைகள் லட்சக்கணக்கான புத்தகங்களை வைத்துக்கொண்டு விற்கவும் வழி.</p>
<p>இதில் விசேடம் என்னவென்றால் அச்சில் இல்லாத, மிகப் பழைய புத்தகங்களைக் கூட அச்சிட்டுக்கொள்ளலாம். விலை பற்றி நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த &#8216;எஸ்பிரசோ புத்தக இயந்திர&#8217;த்தின் பயன்பாட்டைப் பார்த்து விலையை நிர்ணயிப்பார்கள் என்றும் கடைசியில் வழக்கமான புத்தக விலைக்கு வந்துவிடும் என்றும் <a title="விரிவான தகவலுக்குக்கும் படத்திற்கும்" href="http://www.guardian.co.uk/books/2009/apr/24/espresso-book-machine-launches">கார்டியன் செய்திக் கட்டுரை</a> சொல்கிறது. விலையிலும் புரட்சி வந்தால் நன்றாக இருக்கும்.</p>
<p>இங்கே நாங்களெல்லாம் இருக்கிறோமே, கண்ணில் படவில்லையா?</p>
<img src="http://maiya.neerottam.com/6130a9d6/266bb3df/CCBot/1.0 (+http://www.commoncrawl.org/bot.html).gif" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://maiya.neerottam.com/2009/04/24/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>புதுப் பஞ்சாங்கம்</title>
		<link>http://maiya.neerottam.com/2009/03/26/%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/</link>
		<comments>http://maiya.neerottam.com/2009/03/26/%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/#comments</comments>
		<pubDate>Thu, 26 Mar 2009 06:18:35 +0000</pubDate>
		<dc:creator>சாத்தான்</dc:creator>
				<category><![CDATA[ஊடகம்]]></category>
		<category><![CDATA[புலம்பல்]]></category>
		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>

		<guid isPermaLink="false">http://maiya.neerottam.com/?p=679</guid>
		<description><![CDATA[Progress Publishers என்ற முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், மீர் பதிப்பகம் உள்ளிட்ட சோவியத் பதிப்பகங்களின் புத்தகங்களை சோவியத் காலத்தில் தமிழகத்தில் விற்றுவந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தற்போது தன் கையிருப்பில் உள்ள ருஷ்யப் புத்தகங்களைத் தொடர்ந்து விற்றும் தாறுமாறாகப் பதிப்பித்தும் வருவது தெரிந்த விஷயம். முன்னேற்றப் பதிப்பகத்தின் &#8216;ருஷ்யப் புரட்சி 1917&#8242; என்ற படக்கதையின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மறுபதிப்பை  &#8216;சித்திரக்கதை&#8216;யில் பார்த்தேன். உள்ளே ஒரு பக்கத்தில் மொண்ணை செவ்வகத்திற்குள் நியூ செஞ்சுரிக்காரர்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>Progress Publishers என்ற முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், மீர் பதிப்பகம் உள்ளிட்ட சோவியத் பதிப்பகங்களின் புத்தகங்களை சோவியத் காலத்தில் தமிழகத்தில் விற்றுவந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தற்போது தன் கையிருப்பில் உள்ள ருஷ்யப் புத்தகங்களைத் தொடர்ந்து விற்றும் தாறுமாறாகப் பதிப்பித்தும் வருவது தெரிந்த விஷயம்.</p>
<p>முன்னேற்றப் பதிப்பகத்தின் &#8216;ருஷ்யப் புரட்சி 1917&#8242; என்ற படக்கதையின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மறுபதிப்பை  &#8216;<a href="http://comicstamil.blogspot.com/2009/03/blog-post.html">சித்திரக்கதை</a>&#8216;யில் பார்த்தேன். உள்ளே ஒரு பக்கத்தில் மொண்ணை செவ்வகத்திற்குள் நியூ செஞ்சுரிக்காரர்கள் போட்டிருக்கும் <a href="http://4.bp.blogspot.com/_8C8X2uupnUE/SbfTG3XLlTI/AAAAAAAAAK4/bzo60CWOiYY/s1600/Picture%2B001.jpg">விவரங்களை</a>ப் பார்த்தபோது மகா எரிச்சல் ஏற்பட்டது.</p>
<p>Progress Publishersஇன் புத்தகப் பிரதிகளை குறைந்தது இருபதாண்டு காலம் லட்சக்கணக்கில் விற்றவர்கள், முதல் பதிப்பை வெளியிட்டோர் Progressive Publishers என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். பெயரை சரியாக எழுதக் கூடவா துப்பில்லை? அந்தப் புத்தகத்தின் காப்பிரைட் தங்களுக்கே உரியது என்ற பொருளில் &#8216;Copy Right&#8217;க்கு நேராக Publisher என்று போட்டுக்கொண்டிருக்கிறார்கள். &#8216;<a href="http://www.neerottam.com/artpost/2009/03/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-107-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/">வேதியியலைப் பற்றி 107 கதைக</a>&#8216;ளுக்கும் இந்த கதிதான் ஏற்பட்டிருக்கும். அதை வெளியிட்ட மீர் பதிப்பகம் பிராக்ரஸ், ராதுகா போலில்லாமல் <a href="http://translate.google.com/translate?hl=en&amp;u=http%3A%2F%2Fmir-publishers.rusmarket.ru%2F">இப்போதும் இருக்கிறது</a>.</p>
<p>முன்னேற்றப் பதிப்பகத்திற்கு வந்த நிலைமையைப் பாருங்கள்! தரமான உருவாக்கத்தில், பல சமயங்களில் நல்ல மொழிபெயர்ப்பில் வந்த அற்புதமான சிறுவர் நூல்களையும் புஷ்கின், சேகவ், துர்கேனிவ், தல்ஸ்தோய் போன்றோரின் படைப்புகளையும் படித்தவர்களால்/பார்த்தவர்களால் அவற்றை மறக்க முடியுமா?</p>
<p>ஒரு நல்ல விஷயத்தை நம்மவர்கள் கையில் சிக்கினால் என்ன ஆகும் என்பதை நியூ செஞ்சுரி புக்ஸ் நிரூபித்துவிட்டது. NCBHக்குத் தொழில் அறிவு துளியாவது இருந்திருந்தால் பெரும்பாலான புத்தகங்களைக் கையிருப்பில் வைத்திருந்து ஏதாவதொரு விதத்தில், கொஞ்சம் கூடுதல் விலையிலான மறுபதிப்புகளாகவாவது கிடைக்கச் செய்திருக்கும். ஆனால் உருப்படியான காரியங்களைச் செய்வதை விட நம்முடைய முத்திரையைப் பதிப்பது அதிமுக்கியமாகிவிடுகிறது.</p>
<p>NCBH கையில் இருந்தது மாபெரும் சொத்து. அதை நாசமாக விட்டதே பெரிய துப்புகெட்டத்தனம். கரையான்களும் இன்ன பிறவும் தின்றது போக மிஞ்சியதை இப்படி ஒப்பேற்றுவது அசிங்கம். இதற்கு பதிலாக ஈசாப், தெனாலி ராமன், பீர்பால் கதைகள் என்று ஓட்டுவது எவ்வளவோ மேல்.</p>
<img src="http://maiya.neerottam.com/6130a9d6/266bb3df/CCBot/1.0 (+http://www.commoncrawl.org/bot.html).gif" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://maiya.neerottam.com/2009/03/26/%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
	</channel>
</rss>

