மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு – 1
இது 2002இல் நான் மொழிபெயர்த்த சிறுகதை. ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பின் தமிழாக்கம். அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது. ஹைன்ரிஷ் போல் (Heinrich Böll) எழுதிய At the Bridge என்ற கதையின் பெயர்ப்பு. கொஞ்சம் டச்சப் வேலை செய்து பெருந்தவறுகளைத் திருத்தியிருக்கிறேன். மற்றபடி இப்போதும் என் மொழிபெயர்ப்பு அப்படியேதான் இருக்கிறது. மொழிபெயர்ப்பு பற்றி சவுண்டு விடுபவன் தன் மொழிபெயர்ப்பைக் காட்டாமல் இருக்கிறான் என்ற அவப்பெயரைத் தவிர்க்கவும் இதனை இங்கு ரிலீஸ் செய்கிறேன். ஹைன்ரிஷ் போல் எனது அபிமான [...]
“நேக்கு நன்னா வேணும்…!”
கதை எழுதுபவர்களை எல்லாம் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிற விஷயங்களில் ஒன்று கதைக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுப்பது. ஆனால் சில பேருக்கு அது எந்த மூளைக் கசக்கலும் இல்லாமல் கைவந்துவிடுகிறது. இந்த வார குமுதம் சிநேகிதியை சோம்பேறித்தனமாகப் புரட்டிக்கொண்டிருந்தபோது 60-ஆம் பக்கத்தில் ஒரு நன்முத்து கண்ணில் பட்டது. சிறுகதை இப்படி ஆரம்பிக்கிறது – ஈஸ்வரி தன்னெதிரே இருந்த பெயர்ப் பலகையை பிரமிப்பாகப் பார்த்தாள். “ஈஸ்வரி ஐ.ஏ.எஸ்’ உச்சரிக்கும் போதே தித்தித்தது. ஈஸ்வரி கண்களை மூடினாள்… நடந்த சம்பவங்கள் நினைவுக்கு [...]
டிஜிட்டல் கிருமி
இது கூகிள் வருவதற்கு முன்பு, இந்தியாவில் இணையக் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முன்பு நான் எழுதிய கதை (சமுroy என்ற புனைபெயரில்). இது ஒரு இணைய இதழில் வெளியானது. சற்றே புதுப்பித்து இங்கே இடுகிறேன். * * * டிஜிட்டல் கிருமி காலேஜ் முடிந்து அவசர அவசரமாக பிரவுசிங் சென்டருக்குப் போய்ப் பார்த்தால் செமை கூட்டம். அந்த இடத்தில் 3 மணி வாக்கில்தான் கூட்டம் சேரும். நான் வெளியே நிற்க வேண்டியிருந்தது. எனக்கு முன்பே வந்திருந்த இரண்டு இளைஞர்களும் [...]

