அரைகுறைத் தமிழர்கள்
கீழ்க்கண்டவை கடந்த சில நாட்களில் தட்ஸ்தமிழ்.காமில் வந்த தலைப்புச் செய்திகள். இவை அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை கண்ணில் படுகிறதா?
- வாசிம் அக்ரம் மனைவி திடீர் சுகவீனம் – சென்னையில் இறக்கப்பட்ட விமானம்
- போதையில் இருந்த ஏர் இந்தியா விமானி!
- நயன்-பிரபுதேவா.. இடையே புகுந்த ஆயிஷா!
- முக்காடு போட்டு வந்த புவனேஸ்வரி
- ஹிஸ்பானோவை வாங்கிய டாடா
- பெங்களூரில் கண் கலங்கிய வைகோ
- சரணாலய பகுதியில் ஆய்வை துவக்கிய கேரளா!
- உயிருடன் உள்ளவருக்கு அஞ்சலி செலுத்திய ப.சி!
- இல.கணேசனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்
சில செய்திகள் வேறு காரணங்களுக்காகக் கடுப்பேற்றினாலும் நான் சொல்ல வருவது மொழி விஷயம். இது என்ன அபத்தமான நடை? இந்தத் தலைப்புச் செய்திகள் எல்லாம் முடிவடையாத வாக்கியங்கள். ஒன்றிரண்டு தடவை என்றால் வெரைட்டிக்காக விட்டுவிடலாம். ஆனால் இப்படி வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்துவது அச்சுப் பத்திரிகைகளில் கூட ஒரு புதிய பழக்கமாகியிருக்கிறது. படிக்கும்போது பயங்கர ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.

