மொழி அதிர்ச்சிகள்
மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் “மொழி அதிர்ச்சி” என்ற சிறுகதை 300 வார்த்தைகள்தான் இருக்கும். பெரிய மாஸ்டர்பீஸ் எல்லாம் இல்லை. கிட்டத்தட்ட வலைப்பதிவில் வரும் அனுபவப் பகிர்வின் தரம்தான் இருக்கும். ஆனால் அது இப்போதும் சிலருக்கு நினைவிருக்கக் காரணம், மொழி விஷயத்தில் மாந்தர் காட்டும் துணிகரத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அன்றாடம் எதிர்கொள்வதுதான். கதையின் சுருக்கம்: கதைசொல்லி ஓர் உள சிகிச்சையாளன். ஆலோசனைக்கு வரும் ஒருவர் தனது உறவினரின் தீவிர மனப் பிரச்சினையை விரிவாக விளக்குகிறார். ரிலாக்சேஷன் என்ற [...]
அமெரிக்காவைப் பார்!
அந்தக் காலத்து எழுத்தாளர் சோம.லெ. இலக்குமணச் செட்டியாரின் ‘அமெரிக்காவைப் பார்!’ என்ற புத்தகம் (வெளியீடு: இன்ப நிலையம், சென்னை-4, பிப்ரவரி 1950) பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. சுவாரஸ்யமான நடையும் கருப்பு-வெள்ளைப் படங்களும் நிறைந்த புத்தகம் இது. சும்மா மேய்ந்தபோது தென்பட்ட ஒரு பகுதி பின்வருமாறு: பெண்கள் ஒரு நாட்டில் மக்கள் வாழும் வகையை யறிவதற்குக் குடும்பங்களைப் பற்றிய விவரங்களையும், குடும்பத்தின் சிறந்த உறுப்பினராகிய பெண்களின் நிலையையும் ஆராய்ந்தறிவது இன்றியமையாதது. இந்த நூற்றாண்டில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஒரு [...]
கர்ட் வானகட் மரணம்
அமெரிக்க எழுத்தாளர் கர்ட் வானகட் (Kurt Vonnegut) இறந்துவிட்டார். அவருக்கு வயது 84. Cat’s Cradle, The Sirens of Titan, Slaughterhouse-Five, Breakfast of the Champions உள்படப் பல நாவல்கள், Hocus Pocus, Welcome to the Monkey House உள்பட சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன. மரபுகளைக் கடாசிவிட்டு எழுதும் பெரிய எழுத்தாளர்கள் பலர். ஆனால் கர்ட் வானகட் போல வேறு யாரும் எழுத முடியும் என்று தோன்றவில்லை. அறிவியல் புனைவு வடிவத்தில் – [...]
புது உலகு படைப்பதில் எனது பங்கு
1. தமிழின் இரண்டாவது க்யூபிச நாவலான எனது ‘திசை காட்டிப் பறவை‘யில் 17ஆம், 18ஆம் அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 2. தவிர்க்கவியலாத காரணங்களால் இவ்வலைப்பதிவில் இனி பின்னூட்டங்கள் வடிகட்டப்படும்.

